Sunday, September 20, 2009

இது நிழல் சிந்தும் கண்ணீர்!




மிகச்சரியாய்
4 மணிக்கு
கண்ணி வைத்து
அடிக்கிறது கடிகார முள்!

தூக்கத்தின் மிச்சத்தை
துச்சமென மிதித்து
உதறி எழுகின்றன கண்கள்!


பெரும்பாலும்
காலைக்கடன்கள்
காப்பி போடுவதிலும்,
கோலம் போடுவதிலுமே
மறந்து போகும்!


அழுகின்ற குழந்தையின்
ஹார்லிக்ஸ் முதல்
அறுபது வயது
மாமாவின் iyodex வரை
எல்லாம் பழக்கப்பட்ட
வழக்கங்கள் தான்!


அரைகுறை உணவு,
அலுவலக அவசரம்,
அதிகாரியின் திட்டு,
அனைத்தும் மறத்து போகும்,
மகனின் matriculation
பீஸை நினைக்கும் போது!


இடைவேளையில்,
கொஞ்சம் முத்தங்கள்,
பல அழுகைகள்,
சில ஆறுதல்கள்!


இருதயம் கூட
விட்டு விட்டு துடிக்கும்!
இந்த பெண் வாழ்வு மட்டுமே
சுடும் உலை
போலகொதிக்கும்!


இருப்பினும்,
சேவல் கூவி
விடியப்போகும்
மறுநாளுக்காக,
கண்கள்
காத்திருக்க தொடங்கும்!

2 comments:

  1. தனியே ஓர் ஓலம் தாய்மை nice

    ReplyDelete
  2. யதார்த்தம்...

    ReplyDelete